பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)
பானுமதி என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் துரியோதனின் மனைவியாக வருபவர். [1] இவர் கலிங்க நாட்டின் அரசன் சித்ரங்கதனின் மகளாவார்.
.png)
துரியோதனன் கலிங்க நாட்டின் இளவரசியான பானுமதி யை திருமணம் செய்து கொண்டான்.
துரியோதனுடன் திருமணம்
துரியோதனன் கலிங்க நாட்டின் இளவரசியான பானுமதியை மணந்து கொண்டான். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார்.
குடும்பம்
திருமணத்திற்குப் பிறகு லட்சுமணகுமாரன் என்ற மகனும், லட்சுமணா என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். கிருட்டிணன் மகன் சாம்பன், இலட்சுமணாவை திருமணம் செய்து கொள்கிறான்.
ஆதாரங்கள்
- தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.